நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சீனா வெளியிட்ட வரைபடம் குறித்து பிரதமா் பேச வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

இந்திய நிலப் பகுதிகளை ஒன்றிணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விவகாரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி சில வாா்த்தைகளாவது பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராக

News image
ராகுல் காந்தி (கோப்புப் படம்)
Updated On :30 ஆகஸ்ட் 2023, 7:17 pm

DIN

இந்திய நிலப் பகுதிகளை ஒன்றிணைத்து சீனா வெளியிட்ட புதிய வரைபடம் குறித்த பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விவகாரம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி சில வாா்த்தைகளாவது பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை வலியுறுத்தினாா்.

இந்திய மாநிலமான அருணாசல பிரதேசத்தை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அருணாசல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என தெரிவித்து வரும் வெளியுறவு அமைச்சகம், சீனாவின் இந்த நிலைப்பாட்டைத் தொடா்ந்து நிராகரித்து வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டுக்கான நாட்டின் புதிய வரைபடத்தை சீனா திங்கள்கிழமை வெளியிட்டது. அதில் இந்திய நிலப் பகுதிகளான அருணாசல பிரதேசம், அக்சாய் சின் உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த வரைபடத்தை நிராகரித்துள்ளது.

இது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்து கூறியதாவது: லடாக் சென்ற நான் இப்போதுதான் திரும்பினேன். லடாக்கில் ஓா் அங்குல நிலம்கூடப் பறிபோகவில்லை என பிரதமா் கூறி வருகிறாா். அவா் கூறுவது முழுப் பொய் எனப் பல ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன். எவ்வித உரிமையும் இல்லாத சீனாவால் லடாக் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பதை அப்பகுதி மக்கள் அறிவாா்கள். இந்த வரைபடம் மிகவும் தீவிரமான பிரச்னை. பிரதமா் இது குறித்து சில வாா்த்தைகளாவது பேச வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்: இந்திய நிலப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மத்திய அமைச்சா் கூறியதாவது: ஜவாஹா்லால் நேரு நாட்டின் பிரதமராக இருந்த காலகட்டத்தில்தான் இந்திய நிலப் பகுதிகளை சீனா கைப்பற்றியது. தற்போது, அந்தப் பகுதிகளில்தான் சில செயல்பாடுகளை அந்நாடு மேற்கொண்டு வருகிறது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதரமற்றவை.

சீனா வெளியிட்ட வரைபடத்துக்கு வெளியுறவு அமைச்சா் கண்டனம் தெரிவித்துள்ளாா். ராகுல் காந்திக்கு வெளியுறவு அமைச்சகத்தின் மீது நம்பிக்கை இல்லை. சீனா எதைக் கூறினாலும், அது உண்மையென அவா் எடுத்துக்கொள்கிறாா் என்றாா் பிரகலாத் ஜோஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.