

பஞ்சாப் மாநிலம் சங்குரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில், விடுதி உணவகத்தில் சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்ட 18 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி போன்ற உபாதைகள் ஏற்பட்டன .
விடுதி உணவுக்கான பொருப்பாளர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், துணை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பைன்ஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையிலிருந்து 14 மாணவர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் 4 மாணவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாக மாவட்ட துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
விடுதியிலிருந்து உணவுப்பொருள்களின் மாதிரியும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளதாகவும் துணை ஆட்சியர் தெரிவித்துள்ளார். உணவுத் தரம் குறித்து ஏற்கனவே பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்ததாக மாணவர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.