ம.பி.யில் வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!

காலை 11 மணி நிலவரப்படி 155 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
ம.பி.யில் வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்!
Updated on
1 min read


மத்தியப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. மாநிலத்தில் வெற்றிக்குத் தேவையான பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை வகிப்பதால், காங்கிரஸ் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  

இதில், மத்தியப் பிரதேசத்தில் ஆரம்பம் முதலே ஆளும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 68 இடங்களிலும், பிஎஸ்பி ஓரிடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

மத்தியப் பிரதேசத்தில் தற்போதுவரை 48.59 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 40.42 சதவிகிதம் வாக்குகள் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com