ம.பி.யில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்!
நண்பகல் 12 மணி நிலவரப்படி 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.


மத்தியப் பிரதேசத்தில் பெரும்பான்மை பலத்தோடு பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என முதல்வர் சிவராஜ்சிங் செளஹான் தெரிவித்துள்ளார்.
நண்பகல் 12 மணி நிலவரப்படி 158 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. வெற்றி பெறுவதற்கு 116 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய தேவை உள்ள நிலையில், பாதிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை (டிச. 3) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக சமூக வலைதளத்தில் (எக்ஸ்) பதிவிட்டுள்ள முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான், முழு பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...