/

ராஜஸ்தானில் 2013, 2018 தேர்தல்களில் என்ன நடந்தது?

ராஜஸ்தான் மாநிலத்தில் 2013 மற்றும் 2018 தேர்தல்களில் என்ன நடந்தது என்ற தகவல்கள் நினைவூட்டலுக்காக

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:20 pm

DIN

ராஜஸ்தான் மாநிலத்தில் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில், 2013 மற்றும் 2018 தேர்தல்களில் என்ன நடந்தது என்ற தகவல்கள் நினைவூட்டலுக்காக..

ராஜஸ்தானில் ஒரு தொகுதி நீங்கலாக 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 

சுமார் 5.25 கோடி வாக்காளர்களைக் கொண்ட ராஜஸ்தானில் 73.92 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவும் பலப்பரீட்சை நடத்திய இந்தத் தேர்தலில்,  வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குஎண்ணிக்கைத் தொடங்கியது முதலே பாஜகவின் கை ஓங்கி வருகிறது. இந்த தேர்தலில் சுமார் 1.862 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களது தலையெழுத்தை முடிவு செய்யும் வகையில் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தானில் வெளியாகியிருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, பாஜக 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதாக தேர்தல் ஆணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி, அசோக் கெலாட் தலைமையில் தேர்தலை சந்தித்து 100 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அப்போது பாஜக வெறும் 73 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 2013 - 2018 வரையிலான தனது ஆட்சியதிகாரத்தை இழந்திருந்தது. அசோக் கெலாட் முதல்வரானார். 

அதுபோல, 2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில், பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அந்த தேர்தலில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று அருதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.