தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை!

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்குபெறும் சந்திப்பு நடைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானாவில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலர் பங்குபெறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் ஆளும் பாரதீய ராஷ்டிரிய சமிதியை வீழ்த்தி காங்கிரஸ் முதல் முறையாக தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. தெலங்கானாவில் காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு ஆட்சியமைப்பது குறித்து காங்கிரஸ்  சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்ததாவது: காங்கிரஸின் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது ரேவந்த் ரெட்டிக்கு முதல்வர் பதவி கிடைக்குமா என்பது தெரிந்துவிடும். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை ராகுல் காந்தி அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கர்நாடக மாநில துணை முதல்வர்  டி.கே.சிவகுமார் மற்றும் தெலங்கானா காங்கிரஸ் பொறுப்பாளர் மாணிக்ராவ் தாக்கரே உடனிருந்தனர். இந்த சந்திப்பின்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com