அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

முன்னாள் மத்திய அமைச்சரின் மடிக்கணினியை திருடிய நபர் கைது!

முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸின் மடிக்கணினியைத் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :11 டிசம்பர் 2023, 2:18 pm

DIN

முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸின் மடிக்கணினியைத் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தில்லியில் உள்ள சர்வதேச இந்திய மையத்துக்கு கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது காரிலிருந்த மடிக்கணினியை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மடிக்கணினியை  சர்வதேச இந்திய மையத்துக்கு வருகை தந்த கார் ஓட்டுநர் ஒருவர் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.