முன்னாள் மத்திய அமைச்சர் கே.ஜே.அல்ஃபோன்ஸின் மடிக்கணினியைத் திருடிய நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது: முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் தில்லியில் உள்ள சர்வதேச இந்திய மையத்துக்கு கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது காரிலிருந்த மடிக்கணினியை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சரின் மடிக்கணினியை சர்வதேச இந்திய மையத்துக்கு வருகை தந்த கார் ஓட்டுநர் ஒருவர் எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.