விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வேற்று சாதி இளைஞருடன் காதல், தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

உத்தரப் பிரதேசத்தில் வேற்று சாதி இளைஞரைக் காதலித்த தங்கை, அண்ணனால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

News image

கோப்புப்படம்.

Updated On :11 டிசம்பர் 2023, 9:25 am

உத்தரப் பிரதேசம் ஷேக்பூரா கதீம் கிராமத்தில் 17 வயதான தங்கையை சுட்டுக்கொன்ற அண்ணனைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர். 

கடந்த ஞாயிறு அன்று வீட்டில், தங்கை முஸ்கானை  குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்துமாறு அண்ணன் ஆதித்யா கூறியுள்ளார். அவரது பேச்சைக் கேட்காததால் தங்கையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

முஸ்கானை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அண்ணன் ஆதித்யா நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தியிருப்பதாக உதவி காவல் கண்காணிப்பாளர் அபிமன்யூ மங்ளிக் தெரிவித்துள்ளார்.

தங்கை முஸ்கான் வேற்று சாதியின இளைஞரைக் காதலித்து வந்ததாகவும் அண்ணன் ஆதித்யா அதை எதிர்த்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர், இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தப்பிச்சென்ற குற்றவாளியைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் உள்ளனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.