புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல்  வன்கொடுமை செய்தவரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

News image

கோப்புப்படம்.

Updated On :11 டிசம்பர் 2023, 10:42 am

DIN

மத்தியப் பிரதேசம் காட்னி மாவட்டத்தில் ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் ரயில்வே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். 

ஜாபல்பூர் - ரீவா மீமு ரயிலில் பயணித்த அந்தப் பெண்ணைக் கழிவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த பன்காஜ் குஷ்வாஹா என்ற நபரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குற்றவாளியிடமிருந்து தப்பித்த பெண், சாத்னா ரயில் நிலையக் காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். ரீவா ரயில் நிலையத்தை அடைந்தவுடன் கழிவறையின் உள்ளே கதவைப் பூட்டிக்கொண்ட குற்றவாளியை, பூட்டை உடைத்து ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

குற்றவாளியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகக் துணைக் காவல் கண்காணிப்பாளர் சரிகா பாண்டே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.