ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்தீஸ்கரில் 2 நாள்களில் நிகழ்ந்த 2வது சம்பவம்!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் காவலர் இருவர் காயமடைந்தார். 

News image
Updated On :12 டிசம்பர் 2023, 9:42 am

DIN

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்கள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் மாவட்ட ரிசர்வ் காவலர் இருவர் காயமடைந்தார்.

கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உள்பட்ட சலேடோங் கிராமத்திற்கு அருகே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. திங்களன்று இதேபோன்ற சம்பவத்தில் இரண்டு பாதுகாப்புப்பணியாளர்கள் காயமடைந்தனர். 

சாலை கட்டுமானம் மற்றும் பிற வளர்ச்சிப் பணிகளுக்கு வசதியாக, நக்சல்களின் கோட்டையான சலேடோங்கில், மாநில காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் புதிய முகாம் செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த முகாம் சிந்தல்நார்-கிஸ்டாரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. அப்பகுதியில் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் இது முக்கியமானதாக இருக்கும் என்று  அதிகாரிகள் தெரிவித்தனர். 

முகாம் அமைப்பதற்கு முன், பாதுகாப்புப் பணியாளர்களின் கூட்டுக் குழுக்கள், நக்சலைட்டுகளால் புதைக்கப்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டறிய, அப்பகுதியில் நடவடிக்கையை மேற்கொண்டன.

காயமடைந்த பாதுகாப்பு வீரர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். திங்களன்று, அப்பகுதியில் இதேபோன்ற வெடிகுண்டு வெடிப்பில் இரண்டு சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர்.

தற்போது அந்த பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.