ஜெகந்நாதர் கோயிலில் விஷ்ணு தேவ் சாய் வழிபாடு!

சத்தீஸ்கர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு தேவ் சாய் ராய்ப்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு செய்தார். 
ஜெகந்நாதர் கோயிலில் விஷ்ணு தேவ் சாய் வழிபாடு!
Published on
Updated on
1 min read

சத்தீஸ்கர் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு தேவ் சாய் ராய்ப்பூரில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் வழிபாடு செய்தார். 

சத்தீஸ்கரில் 54 இடங்களுடன் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. சத்தீஸ்கா் புதிய முதல்வராக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான விஷ்ணு தேவ் சாய் (59) கடந்த ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

ஜெகந்நாதர் கோயிலில் இன்று காலை பூஜைகளைச் செய்த அவர் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்ததாக  மாநில மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் ராய்ப்பூர் நகர வடக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ புரந்தர் மிஸ்ரா கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். 

பின்னர், சாய் இங்குள்ள புரேனா பகுதியில் உள்ள தனது இல்லத்தை அடைந்து தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.

புதிய முதல்வரின் பதவியேற்பு விழா அறிவியல் கல்லூரி மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற மாநில முதல்வர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமித் ஷாவும் நட்டாவும் ராய்ப்பூருக்கு வந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com