எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சபரிமலையில் கட்டுப்பாடற்ற நிலைமை இல்லை: கேரள முதல்வர்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

News image
பினராயி விஜயன்
Updated On :13 டிசம்பர் 2023, 12:51 pm

DIN

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அதிகரித்து வந்தாலும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நவம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்தாண்டு தினசரி 1.20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். 

சபரிமலை தேசிய யாத்திரை தலமாக இருப்பதால், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். 

நவகேரள சதாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, 

அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் கூட்ட மேலாண்மைத் திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டன என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை நிராகரித்த முதல்வர், ஒவ்வொரு முறையும் சன்னிதானத்தில் அவசரத்தின் அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் மேல்நோக்கி மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள். 

கட்டுப்பாடற்ற அதிக அவசரம் காரணமாகவே நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விபத்துகளை ஏற்படுத்துகிறது. எனவே, நாங்கள் மிகுந்த கவனத்துடன் விஷயங்களைக் கையாண்டு வருகிறோம். 

கடந்த மண்டல சீசனின் ஆரம்ப நாள்களில் நாளொன்றுக்கு சராசரியாக 62 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்குச் சென்றனர். ஆனால் நடப்பு சீசனின் 4 நாள்களிலேயே 88 ஆயிரத்தைத் தாண்டி பக்தர்கள் வருகின்றனர். 

சென்னையில் வெள்ளம், தெலங்கானாவில் பேரவைத் தேர்தல் காரணமாக பக்தர்கள் கூட்டம் சற்று குறைந்த நிலையில், தற்போது அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பொது விடுமுறை நாள்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதனால் பக்தர்கள் சபரிமலைக்குச் செல்ல அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. சபரிமலைக் கோயிலில் பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருவதாகவும், அதிக நெரிசலைச் சமாளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பாட் முன்பதிவை மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.