ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்: பிஎஸ்எப் தலைமைக் காவலர் பலி!

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். 

News image
Updated On :14 டிசம்பர் 2023, 10:40 am

DIN

சத்தீஸ்கரின் காங்கேர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்தில் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டார். 

பார்தாபூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சடக்டோலா கிராமத்திற்கு அருகே பிஎஸ்எப் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றது. 

நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பிஎஸ்எப் தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் (45) காயம் அடைந்தார். அவருக்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பக்கஞ்சூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த தலைமைக் காவலர் அகிலேஷ் ராய் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். 

பிஎஸ்எப், மாவட்ட ரிசர்வ் காவலர் மற்றும் மாவட்ட போலீஸ படை ஆகியவற்றின் கூட்டுக் குழு இணைந்து தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்று வருகின்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.