சத்தீஸ்கர் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை வியாழக்கிழமை சந்தித்தனர்.
சத்தீஸ்கர் ஆளுநர் மற்றும் அசாம் முதல்வர் ஆகிய இருவரும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் மாளிகையில் இன்று(டிச.14) சந்தித்து பேசியதாகக் குடியரசுத் தலைவர் அலுவலகம் எக்ஸில் பதிவிட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கான புகைப்படங்களையும் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.