பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

மும்பையில் 202 கத்திகளுடன் பிடிப்பட்ட நபர் கைது!

தெற்கு மும்பையில் பல்வேறு அளவுகளில் 202 கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

News image
Updated On :15 டிசம்பர் 2023, 3:14 pm

DIN

மும்பை: தெற்கு மும்பையில் 200-க்கும் மேற்பட்ட கத்திகளை வைத்திருந்ததாக 42 வயது நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில், மும்பை மற்றும் அமராவதி காவல்துறையின் கூட்டுக் குழு நேற்று முசாபிர் கானா பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்தனர். கைது கைது நபரிடம் இருந்து பல்வேறு வகையான 202 கத்திகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றில் ஒன்பது கத்திகள் 21 அங்குல நீளம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றம் சாட்டப்பட்ட பாந்த்ராவைச் சேர்ந்த சையத் கமர் உசேன் மீது ஆயுதச் சட்டம் மற்றும் மகாராஷ்டிரா காவல் துறையின் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.