சஹாரன்பூர்: நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போன 32 வயதான நபரின் உடல், கழிவுநீர் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இறப்பிற்கான காரணம், உடற்கூராய்வுக்குப் பிறகு தெரிய வரும் எனவும் உடற்கூராய்வுக்கு உடல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் பேசும்போது, ஆனந்த் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் நான்கு நாள்களுக்கு முன்பு காணாமல் போனதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது வீட்டினர், ராஜ்குமார் திரும்பி வந்துவிடுவார் என்று இரண்டு நாள்கள் காத்திருருந்த பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிக்க: வைரல் விடியோ: மாமியாரைத் தாக்கிய மருமகள் கைது!
குதுப்ஷர் சரக காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் பகுதியில் ராஜ்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

