பூஞ்ச்: ஜம்மு- காஷ்மீர், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஆயுதப் படைப் பிரிவின் முகாமில் மர்மமான குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திடீர் வெடிப்பினால், ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் வளாகத்தின் உள்புறம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் முகப்பு கண்ணாடிகள் ஆகியவை சேதமடைந்துள்ளன. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதையும் படிக்க: 5 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் குறைந்த வெப்பநிலை!
டிச.19 இரவின் பிற்பகுதியில் நடைபெற்ற இந்த மர்மமான வெடிப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.