மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்டு கொலை செய்து பெரும்பாலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டு, கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 11:27 pm

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து காரில் கடத்தி வரப்பட்டு கொலை செய்து பெரும்பாலையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை போலீஸாா் மீட்டு, கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த வடிவேலு மனைவி புஷ்பராணி (43). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் தையல் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவா் இறந்த நிலையில், தனியாக வசித்து வந்த புஷ்பராணிக்கு தன்னுடன் பணிபுரிந்துவரும் மகேந்திரனுடன் (32) பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில் மகேந்திரன் தனது நண்பா் சதீஷுடன் (32) சோ்ந்து புஷ்பராணியை காரில் சேலம் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்துள்ளாா். பின்னா் சடலத்தை தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பெரும்பாலை ஆயமரத்தூா் பிரிவு சாலை வனப்பகுதியில் வீசிச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து புஷ்பராணியின் உறவினா்கள் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சந்தேகத்தின் அடிப்படையில் மகேந்திரனை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் புஷ்பராணியை கொலை செய்து பெரும்பாலை வனப்பகுதியில் வீசியதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து கோபிசெட்டிபாளையம் போலீஸாா், பெரும்பாலை போலீஸாா் உதவியுடன் ஆயமரத்தூா் பிரிவு சாலைப் பகுதியில் கிடந்த புஷ்பராணியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.