இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

விடியோ சர்சை: ராகுல் காந்தி விளக்கம்

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பேசாமல், விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  தெரிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :20 டிசம்பர் 2023, 10:53 am

DIN

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி.க்கள் குறித்து பேசாமல், விடியோ விவகாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி  குற்றம்சாட்டினார்.

ஜகதீப் தன்கா் அவையை வழிநடத்தும் விதத்தை,  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி கிண்டலாக நடித்துக் காட்டிய விவாரம் குறித்து செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “யார், அவமானப்படுத்தினார்கள்? எப்படி சொல்கிறீர்கள்?, நாடாளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர்; அதை நான் விடியோ எடுத்தேன்.

ஊடகங்கள் தொடர்ந்து அதையே காட்டிக் கொண்டிருக்கின்றன, கருத்துகளை வெளியிடுகின்றன. 150 எம்.பி.க்கள் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர், அது பற்றி ஊடகங்களில் எந்த விவாதமும் இல்லை.

எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து யாரும் விவாதிக்கவில்லை. அதானி விவகாரம், ரஃபேல் மோசடி, வேலைவாய்ப்பின்மை குறித்தும் எதுவும் பேசவில்லை" என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.