பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறை சோதனை... சிக்கிய பணம் எவ்வளவு?

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்பு
Updated On :21 டிசம்பர் 2023, 8:11 am

DIN

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 70 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வரிஏய்ப்புக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்க திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ பைரான் பிஸ்வாஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை காலை தொடங்கிய சோதனை 19 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தது.

இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதற்கான போதிய விளக்கம் எம்.எல்.ஏ தரப்பில் அளிக்கப்படவில்லை எனவும் ஐ.டி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எம்.எல்.ஏ தரப்பில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மேற்கு வங்கம் சாகர்திகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிஸ்வாஸ், பின்னர் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.