கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 70 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வரிஏய்ப்புக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மேற்கு வங்க திரிணமூல் கட்சி எம்.எல்.ஏ பைரான் பிஸ்வாஸ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிபாத் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் புதன்கிழமை காலை தொடங்கிய சோதனை 19 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்தது.
இந்தச் சோதனையில் கணக்கில் வராத ரூ.70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் இதற்கான போதிய விளக்கம் எம்.எல்.ஏ தரப்பில் அளிக்கப்படவில்லை எனவும் ஐ.டி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: 2024 ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு!
இது குறித்து எம்.எல்.ஏ தரப்பில் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. மேற்கு வங்கம் சாகர்திகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிஸ்வாஸ், பின்னர் திரிணமூல் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


