டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

தெருநாய் கடித்து நான்கு மாத குழந்தை பலி!

தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :25 டிசம்பர் 2023, 4:51 pm IST

தெருநாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே சைக்பேட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குழந்தையின் பெற்றோர் கூலி வேலை செய்துவந்துள்ளனர். கடந்த டிச.8-ஆம் தேதி தேதி அவர்களது குடிசையினுள் தொட்டிலில் குழந்தையை தூங்கவைத்து விட்டு கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். 

அப்போது குடிசையின் அருகே மூன்று தெருநாய்கள் வந்துள்ளன. அதில் ஒரு நாய் குடிசையின் உள்ளே சென்று குழந்தையின் முகம் மற்றும் நெற்றியில் கடித்துள்ளது. அதையடுத்து குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

நாய் கடித்ததால் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த நான்கு மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. 

இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் சுற்றித்திரிந்த 20 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்திற்கும் ஏற்கனவே கருத்தடை செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அந்த நாய்கள் அனைத்தும் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளன. 

கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அம்பர்பேட் பகுதியிலும் நான்கு வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.