புது தில்லி: பெங்களூரு,மும்பையில் இருந்து ஹைதராபாத் சென்ற இரண்டு பயணிகள் விமானங்கள், மோசமான வானிலை காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல் மீண்டும் பெங்களூரு, மும்பைக்கு திரும்பியது.
மும்பையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் சென்ற யுகே837 என்ற பயணிகள் விமானம் திங்கள்கிழமை காலை புறப்பட்டு ஹைதராபாத் சென்றது. ஆனால் ஹைதராபாத்தில் மோசமான வானிலை காரணமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் காலை 9.15 மணியளவில் மும்பை விமான நிலையத்துக்கு திரும்பி வந்தது என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பெங்களூருவில் இருந்து ஹைதராபாத் சென்ற யுகே897 என்ற இரண்டாவது விமானமும் மோசமான வானிலை காரணமாக திருப்பி விடப்பட்டு பெங்களூரு விமான நிலையத்திற்கே திரும்பியுள்ளது.