மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

டீக்கடைக்குள் புகுந்த லாரி, 5 பேர் பலி!

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டையிழந்த லாரி சாலையோரத்திலிருந்த டீக்கடையில் மோதி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

News image

கோப்புப்படம்.

Updated On :30 டிசம்பர் 2023, 9:21 am

புதுக்கோட்டையில் சிமென்ட் ஏற்றி வந்த லாரி டீக்கடை ஒன்றில் மோதியதில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர், 19 பேர் காயப்பட்டுள்ளனர். 

ரோட்டோர டீக்கடையை சேதமாக்கிய லாரி இரண்டு வாகனங்களையும் மோதியுள்ளது. 

திருச்சி - ராமேசுவரம் நெடுஞ்சாலையில், அரியலூரிலிருந்து சிவகங்கை வந்துகொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்ததில் ஒரு கார் மற்றும் வேனில் மோதியது. பின்னர் சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் மோதியது. 

4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்ததாத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாகத் தெர்வித்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.