2024 ஜனவரி 1 முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்க வேண்டாம் என்று ஹிமாச்சலப் பிரதேச அரசுத் துறைகளுக்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு உத்தரவிட்டுள்ளார்.
இ-வாகனங்களை ஊக்குவிப்பதற்கும் மற்றும் 'பசுமையான ஹிமாச்சல்' என்ற இலக்கை அடைவதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை எந்த துறையாவது பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்களை வாங்க வேண்டுமெனில் அதுகுறித்து மாநில அமைச்சரவையிடம் அனுமதி பெற வேண்டும்.
இதையும் படிக்க | பனாரஸ் பல்கலை.யில் மாணவியிடம் அத்துமீறியவர்களுடன் பாஜக தலைவர்கள்!
’பசுமை மற்றும் தூய்மையான ஹிமாச்சல்' என்ற இலக்கை அடைவதற்கான முன்னெடுப்பாக, 2024 ஜனவரி 1 முதல் டீசல் அல்லது பெட்ரோல் வாகனங்களை வாங்க வேண்டாம் என்று முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அனைத்து அரசுத் துறைகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு கூறியதாவது, “அரசின் தொடர் முயற்சியால், அரசு இ-வாகனங்களின் எண்ணிக்கை 185 ஆகவும், தனியார் இ-வாகனங்களின் எண்ணிக்கை 2,733 ஆகவும் ஹிமாச்சலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களது அரசாங்கம் ஹிமாச்சலில் மின் வாகனங்களை பெரிய அளவில் ஊக்குவித்து வருகிறது. போக்குவரத்துத் துறையானது முழுவதுமாக மின்னணு வாகனங்களைக் கொண்ட முதல் துறையாக உள்ளது. மற்ற துறைகளும் அதைப் பின்பற்ற வேண்டும்.
அனைத்து துறைகளும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளில் இயங்கும் வாகனங்களை படிப்படியாக மின் வாகனங்களாக மாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிக்க | கடவுள் ராமரின் மீது யாரும் காப்புரிமை கோர முடியாது: உதித் ராஜ்
இ-வாகனங்களின் பயன்பாடு ஒரு புதிய தொடக்கம் மட்டுமல்ல, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் இ-வாகனங்களின் பயன்பாடு காட்டும்” என்று முதல்வர் சுக்விந்தர் சிங் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் திடீர் நிலச்சரிவு! அலறியடித்து ஓடிய மக்கள்!
மோடி அரசு, பணக்காரர்களுக்கானது! ரமணா பட பாணியில் மாணிக்கம் தாகூர் பேச்சு!
காவல் நிலையத்தில் ஆஜராவதில் விலக்கு! செந்தில் பாலாஜி மனு வாபஸ்!
பட்ஜெட்டை திருப்பதிக்கு எடுத்துச் சென்றால், பாவங்கள் போய்விடுமா? - மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



