ஹிமாசலில் பாஜக மாநில செயற்குழு தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு உலகத் தலைவர் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
பண்டைய இந்தியாவின் ’ஒரே உலகம் ஒரே குடும்பம்’ என்ற கருத்து பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் கீழ் சாத்தியமாகி வருவதாகவும் அந்த தீர்மானத்தில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
ஹிமாசலின் மாநில பாஜக செயற்குழு தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள இந்த தருணத்தில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதற்கு இந்தியா பெருமைப்பட வேண்டும். இந்த ஜி-20 மாநாட்டில் ஒரே பூமி ஒரே குடும்பம் என்ற கருத்தை இந்தியா பிரபலப்படுத்தும். உலகில் உள்ள அனைத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நம்மிடம் ஆற்றல் உள்ளது. பாஜக தேசியத் தலைவராக ஜெ.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள். உலகின் மிகப் பெரிய கட்சியின் தேசியத் தலைவர் ஹிமாசலைச் சேர்ந்தவர் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க: 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த பாகிஸ்தான் வீரர்! (விடியோ)
நமது பாரம்பரியங்கள் மற்றும் கலாசாரங்களை வெற்றிகரமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் உருவாக்கி வருகிறது. ராமர் பிறந்த இடத்தில் பெரிய அளவிலான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. ஸ்ரீ காசி விஸ்வநாத அணையின் மேம்பாடு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியது போன்ற செயல்பாடுகளும் அதில் அடங்கும். வரலாற்றை சரியாக மக்களுக்கு எடுத்துச் செல்வது மிக முக்கியத் தேவையாக இன்று உருவெடுத்துள்ளது. இதனை பிரதமர் மோடி தலைமையிலான அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK


