எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பணம் இல்லை.. மனைவியின் உடலைத் தோளில் சுமந்து சென்ற கணவன்!

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநர் மறுத்ததால், கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
மனைவியின் உடலை சுமந்து செல்லும் கணவன்
Updated On :9 பிப்ரவரி 2023, 10:52 am

DIN

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் உடலை எடுத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநர் மறுத்ததால், கணவன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர், அவசர ஊர்திக்கு ஏற்பாடு செய்து மனைவியின் உடலை எடுத்துச்செல்ல உதவினார்.

ஒடிசா மாநிலம் கோரபுட் பகுதியில் வசித்து வருபவர் சாமுலு பங்கி. 35 வயதான அவர், தனது உடல்நிலை சரியில்லாத தனது மனைவியை விசாகப்பட்டிணத்திலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த மனைவி, அங்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை நிர்வாகம், வீட்டில் வைத்து மனைவியை கவனித்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டிணத்திலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தனது வீட்டுக்கு ஆட்டோ மூலம் மனைவியை அழைத்துச்சென்றுள்ளார். வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே மனைவி உயிரிழந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர் வண்டியை இயக்க மறுப்பு தெரிவித்து, அவர்களை பாதியிலேயே இறக்கிவிட்டுள்ளார். ஆட்டோவுக்கு கொடுத்ததுபோக, பணம் இல்லாததால், நெடுஞ்சாலையில் செய்வதறியாது தவித்த சாமுலு, ஒருகட்டத்துக்கு மேல் மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு நடந்துள்ளார். அங்கிருந்து அவரின் கிராமத்துக்கு சுமார் 80 கிலோ மீட்டர். 

அப்போது அவரை விசாரித்த அப்பகுதியைச் சேர்ந்த காவலர் ஒருவர், அவசர ஊர்திக்கு ஏற்பாடு செய்து சாமுலுவை அவரின் மனைவி உடலுடன் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.