புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 பிப்ரவரி 2023, 6:54 am

DIN

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள இந்தியப் பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதை நோக்கிச் சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தில் இருந்து 3 கிலோ போதைப்பொருள்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் நாளிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.