பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள இந்தியப் பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதை நோக்கிச் சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தில் இருந்து 3 கிலோ போதைப்பொருள்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் நாளிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.