மத்திய அசாமில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடா்பாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று காலை 11.57 மணியளவில், பிரம்மபுத்ராவின் தெற்குக் கரையில் உள்ள நவ்கான் மாவட்டத்தில் ரிக்டர் அளவுக்கோலில் 3.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்திலும், ஹொஜாய் நகருக்கு அருகில் உள்ள குவஹாத்தியிலிருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
முன்னதாக, நவ்கான் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், அதே பகுதியில் ரிக்டர் அளவில் 4 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இந்நிலையில், இன்று மீண்டும் அதேபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ அல்லது பொருள்சேதமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.
நவ்கான் மாவட்டம் மட்டுமன்றி, மேற்கு கா்பி ஆங்லாங், கா்பி ஆங்லாங், கோலாகாட், மோரிகான் மற்றும் சோனித்பூா் ஆகிய மாவட்டங்களிலும் அதிா்வுகள் உணரப்பட்டன. இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனா்.
நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ள புவிப் பகுதியில் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. எனவே, இம்மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


