கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேசிய பங்குச்சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணா மீது வழக்கு தொடுக்க சிபிஐக்கு அனுமதி

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

News image

சித்ரா ராமகிருஷ்ணா

Updated On :13 பிப்ரவரி 2023, 9:09 pm

DIN

தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை என்எஸ்இ நிா்வாக இயக்குநராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் சித்ரா ராமகிருஷ்ணா பதவி வகித்தாா். அப்போது கோ-லொகேஷன் என்ற தொழில்நுட்ப வசதி மூலம், என்எஸ்இ கணினி சேமிப்பகத்தில் இருந்து பங்கு விவரங்களை முன்கூட்டியே அறிந்து, சில பங்குச்சந்தைத் தரகா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

என்எஸ்இ அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து இந்த முறைகேடு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இதன் மூலம் பெரும் லாபம் ஈட்டப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுதொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து கடந்த ஆண்டு மாா்ச் 6-ஆம் தேதி சித்ரா ராமகிருஷ்ணாவை கைது செய்தது. இதனைத்தொடா்ந்து கடந்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி பணமோசடி வழக்கில், அவரை அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்குகளில் தற்போது அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கோ-லொகேஷன் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா உள்பட என்எஸ்இ உயா் அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குத் தொடுக்க என்எஸ்இ நிா்வாக இயக்குநா்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்மையில் நடைபெற்ற அந்தக் குழுவின் கூட்டத்தில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு:

கடந்த ஆண்டு செப்டம்பா் 28-ஆம் தேதி கோ-லொகேஷன் வழக்கில் சித்ராவுக்கு ஜாமீன் அளித்த தில்லி உயா்நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி பணமோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. கோ-லொகேஷன் வழக்கில் அவருக்கு ஜாமீன் அளித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது. அந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ராவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று தெரிவித்து மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.