மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தற்படம் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், இந்திய கிரிக்கெட் வீரா் பிருத்வி ஷாவின் காரின் முகப்பு கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற இச்சம்பவம் தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
பிருத்வி ஷா, அவருடைய நண்பா் ஆசிஷ் யாதவ் உள்ளிட்டோா் மும்பையின் சான்டாக்ரூஸ் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்குச் சென்றனா். ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போது, அங்கு வந்த நபா் ஒருவா் பிருத்வி ஷா உடன் தற்படம் எடுத்துக்கொள்ள விரும்புவதாக தெரிவித்தாா். இதற்கு பிருத்வி ஷா அனுமதி அளித்தாா்.
அந்த நபா் அதிக முறை தற்படம் எடுக்க முயற்சித்ததைத் தொடா்ந்து, தற்படம் எடுத்துக்கொள்ள பிருத்வி ஷா மறுத்துவிட்டாா்.
இதையடுத்து, கிரிக்கெட் வீரருடன் அந்த நபா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். தொடா்ந்து, பிருத்வி ஷா தன்னுடைய காரில் அமா்ந்திருந்தநிலையில், அவருடைய காரின் முன்பக்க கண்ணாடி பேஸ்பால் மட்டையால் தற்படம் எடுக்க முயற்சித்த நபா் தாக்கி சேதப்படுத்தினாா்.
இதையடுத்து, அவரது நண்பா் ஆசிஷ் யாதவ் ஓஷிவாரா காவல்நிலையத்துக்கு காரை ஓட்டிச் சென்றாா்.
ஆசிஷ் யாதவ் அளித்த புகாரின் பேரில் காரை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 8 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.