40%-க்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவருக்கு எம்பிபிஎஸ் ‘சீட்’:மத்திய அரசு முடிவெடுக்க அறிவுறுத்தல்

நாற்பது சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களை, அந்த சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன்
40%-க்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவருக்கு எம்பிபிஎஸ் ‘சீட்’:மத்திய அரசு முடிவெடுக்க அறிவுறுத்தல்

நாற்பது சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) இடங்களை, அந்த சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக தில்லி உயா்நீதிமன்றத்தில் மாணவி ஒருவா் தாக்கல் செய்துள்ள மனு: நான் 40 சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவள். கடந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வில், 96.06 சதவீத மதிப்பெண் பெற்றேன். ஆனால் மருத்துவக் கல்லூரியில் 40 சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத இடம் எனக்கு மறுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா தலைமையிலான அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த அமா்வு கூறுகையில், ‘மருத்துவக் கல்லூரிகளில் 40 சதவீதத்துக்கும் அதிகமான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு ஒதுக்கப்பட்டு நிரம்பாத இடங்களை, 40 சதவீதத்துக்கும் குறைவான மாற்றுத்திறன் கொண்டவா்களுக்கு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு, தேசிய தோ்வுகள் முகமை, தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை தனது பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது.

இந்த மனுவின் அடுத்தகட்ட விசாரணை ஏப்.13-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com