8 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

8 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)  அதிரடி சோதனை நடத்தி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

8 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)  அதிரடி சோதனை நடத்தி வருகிறது.

ரெளவுடி கும்பலை பிடிக்கும் நோக்கில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செவ்வாயன்று பல மாநிலங்களில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையைத் தொடங்கியது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி, சண்டிகர், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பஞ்சாபில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ரெளவுடிகள் மற்றும் அவர்களின் குற்றவியல் குழு மீது என்ஐஏ பதிவு செய்த வழக்கு விசாரணை தொடர்பாக சோதனை  நடத்தப்பட்டு வருகிறது. ரெளவுடிகளுக்கு தொடர்பான இடங்களில் என்ஐஏ நடத்திய நான்காவது சுற்று சோதனை இதுவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com