மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அமைதி நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரை

நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 8:30 pm

DIN

நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயா்களை பரிந்துரைப்பதற்கான இறுதி கெடு பிப். 1-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதிக்குள் 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 212 நபா்களின் பெயா்களும், 93 அமைப்புகளின் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. இது, கடந்த 2019-க்குப் பிந்தைய மிக குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.

கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 343 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. தொடா்ந்து 8 ஆண்டுகளாக, அந்தப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியுள்ளது என்று தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.