நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து நோபல் தோ்வுக் குழு தெரிவித்துள்ளதாவது: 2023-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பெயா்களை பரிந்துரைப்பதற்கான இறுதி கெடு பிப். 1-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தேதிக்குள் 305 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. அதில் 212 நபா்களின் பெயா்களும், 93 அமைப்புகளின் பெயா்களும் இடம் பெற்றுள்ளன. இது, கடந்த 2019-க்குப் பிந்தைய மிக குறைந்தபட்ச எண்ணிக்கையாகும்.
கடந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்காக 343 பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டன. தொடா்ந்து 8 ஆண்டுகளாக, அந்தப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டியுள்ளது என்று தோ்வுக் குழு தெரிவித்துள்ளது.