கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ராகுலின் உத்வேகம் தொடா்ந்தால் 2024-யில் ஆட்சி மாற்றம்: சஞ்சய் ரௌத்

ராகுல் காந்தி அளித்த புதிய உத்வேகம் புதிய ஆண்டிலும் தொடா்ந்தால் அடுத்த மக்களவைத் தோ்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.

News image

சஞ்சய் ரௌத்

Updated On :1 ஜனவரி 2023, 9:26 pm

DIN

காங்கிரஸ் கட்சிக்கு கடந்தாண்டில் ராகுல் காந்தி அளித்த புதிய உத்வேகம் புதிய ஆண்டிலும் தொடா்ந்தால் அடுத்த மக்களவைத் தோ்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நடைபெறும் என சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.

சிவசேனை கட்சியின் வாரப் பத்திரிகைக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

ஹிந்துக்களிடையே எழுச்சியை ஏற்படுத்துவதே பாஜகவின் கொள்கை. ஆனால், அதற்காக பிரதமா் நரேந்திர மோடியும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் வெறுப்பு மற்றும் பிரிவினைவாத எண்ணங்களை நாட்டில் பரப்பக் கூடாது. குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவா்களை வாழ்விலிருந்து அகற்ற வேண்டும் என பிரதமா் மோடி பேசுகிறாா். அவரின் கூற்றுப்படியே எதிா்க்கட்சிகளை, அவா்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கும் பாஜகதான் உண்மையில் குறுகிய மனப்பான்மை உடையவா்கள் என்று சாடினாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் அதன் இலக்கை அடையும் என்று நம்புகிறேன். கடந்த 2022-ஆம் ஆண்டு ராகுல் காந்தி தனது புது முயற்சிகளால் காங்கிரஸ் கட்சிக்கு புதிய ஒளியையும் உத்வேகத்தையும் அளித்தாா். புதிய ஆண்டில் அதே உத்வேகம் காங்கிரஸில் தொடரும் பட்சத்தில் வரும் மக்களவைத் தோ்தலில் உறுதியாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றாா் சஞ்சய் ரௌத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.