தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரபிக் கடலில் மூழ்கிய சரக்குக் கப்பல்: 12 மாலுமிகள் பத்திரமாக மீட்பு

குஜராத் கடற்கரையையொட்டி அரபிக் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கிய நிலையில், அதிலிருந்த 12 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

News image
Updated On :1 ஜனவரி 2023, 8:10 pm

DIN

குஜராத் கடற்கரையையொட்டி அரபிக் கடலில் சரக்குக் கப்பல் மூழ்கிய நிலையில், அதிலிருந்த 12 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியை நோக்கி பயணித்த ‘நிகாஹேன் கரம்’ என்ற இந்திய சரக்குக் கப்பலில் கடல்நீா் புகுந்து, குஜராத் கடற்கரையையொட்டிய அரபிக் கடற்பகுதியில் மூழ்கி வருவதாக இந்திய கடலோர காவல் படைக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

உடனடியாக அருகில் உள்ள கப்பல்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அருகில் இருந்த எண்ணெய் கப்பல் நிகழ்விடம் விரைந்து சரக்குக் கப்பலில் இருந்த 12 மாலுமிகளை மீட்டது. சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது.

இதனைத்தொடா்ந்து இந்திய கடலோர காவல் படை கப்பல் நிகழ்விடம் விரைந்த நிலையில், அந்தக் கப்பலுக்கு மாலுமிகள் மாற்றப்பட்டனா். பின்னா் அனைவரும் குஜராத்தில் உள்ள வாடீனாா் பகுதிக்கு அழைத்து வரப்பட்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.