பெங்களூருவில் கட்டுமான தூண் சரிந்த விழுந்த விபத்தில் தாய் மற்றும் குழந்தை பலியாகினர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரெயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த 4 பேர் மீது தூண் விழுந்தது. இதில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
இதையும் படிக்க: பாம்பன் பாலத்தில் மறுஅறிவிப்பு வரும் வரை ரயில் சேவை நிறுத்தம்!
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நான்கு பேரை அந்த வழியாக சென்றவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அதில் தாய் மற்றும் 3 வயது மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.