இளைஞர்களின் சக்தி இந்தியாவை இயக்குகிறது: பிரதமர் மோடி

இளைஞர்கள் தான் இந்தியாவினை இயக்கும் சக்தி எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கு பெரிய வாய்ப்பினை வழங்கி வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களின் சக்தி இந்தியாவை இயக்குகிறது: பிரதமர் மோடி

இளைஞர்கள் தான் இந்தியாவினை இயக்கும் சக்தி எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்கு பெரிய வாய்ப்பினை வழங்கி வருகிறது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தின் ஹூப்ளியில் தேசிய இளைஞர்கள் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் இதனைத் தெரிவித்தார். 

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பொம்மை முதல் சுற்றுலாத் துறை வரை, பாதுகாப்புத் துறை முதல் டிஜிட்டல் தொழில்நுட்பம் வரை இந்தியா உலக அளவில் தலைப்புச் செய்தியாக விளங்குகிறது. இன்று உலக நாடுகள் அனைத்தும் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கான நூற்றாண்டு எனக் கூறுகின்றனர். இது உங்களுடைய நூற்றாண்டு. இந்த நூற்றாண்டு இளைஞர்களுக்கானது. இது இந்திய வரலாற்றில் மிகவும் சிறப்பான தருணம். நீங்கள் சிறப்பான தலைமுறை. உங்களுக்கு மிக முக்கியமான கடமை இருக்கிறது. உலக அளவில் இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் மிக முக்கியமான கடமை இருக்கிறது. இளைஞர்களின் சக்திதான் நாட்டினை இயக்கும் மிகப் பெரிய சக்தியாகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அவர்களுக்குத் தேவையான வாய்ப்புகளை வழங்குகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com