ஜோஷிமட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகை
ஜோஷிமட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகை

ஜோஷிமட்டைச் சேர்ந்த குடும்பங்களுக்கு சிறப்புச் சலுகை

வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஜோஷிமட் நகரில் வாழும் மக்கள், வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரகண்ட் அரசு அறிவித்துள்


டேஹ்ராடூன்: வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் ஜோஷிமட் நகரில் வாழும் மக்கள், வரும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.

இந்த மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளின் உறுதித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான மாநில  அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், ஜோஷிமட் பகுதியில் வசித்து வருவோர் பெற்றிருக்கும் கடன்களுக்கான தவணைகளை செலுத்த ஓராண்டு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

ஜோஷிமட் பகுதியிலிருந்து வெளியேறி, வெளியே வாடகைக்கு குடியிருக்கும் மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் வாடகைப் படி 4 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரமாக உயர்த்தி வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com