பஞ்சாபை தில்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது என்று பஞ்சாபில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் 122வது நாளாக பஞ்சாபில் நடைபெற்று வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்,
பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும், தில்லியிலிருந்து அல்ல. முதல்வர் பகவந்த மானுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்தான் பஞ்சாபில் முதல்வர், தில்லி மற்றும் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்படக் கூடாது.
பகவந்த் மான் கண்டிப்பாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். யாருடைய கைப்பாவையாகவும் இருக்கக்கூடாது என்றார்.
செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணமானது இதுவரை கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களை கடந்துள்ளது.
இதையும் படிக்க | பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
தற்போது பஞ்சாப்பிலிருந்து காஷ்மீருக்கு செல்லும் நடைப்பயணம் ஸ்ரீநகரில் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய கொடியேற்றத்துடன் நிறைவுபெறுகிறது.