பஞ்சாபை தில்லியிலிருந்து ஆட்சி செய்யக் கூடாது என்று பஞ்சாபில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ(இந்திய ஒற்றுமை) நடைப்பயணம் 122வது நாளாக பஞ்சாபில் நடைபெற்று வருகின்றது.
பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில்,
பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும், தில்லியிலிருந்து அல்ல. முதல்வர் பகவந்த மானுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அவர்தான் பஞ்சாபில் முதல்வர், தில்லி மற்றும் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து வரக்கூடிய அழுத்தத்தில் செயல்படக் கூடாது.
பகவந்த் மான் கண்டிப்பாக தன்னிச்சையாக செயல்பட வேண்டும். யாருடைய கைப்பாவையாகவும் இருக்கக்கூடாது என்றார்.
செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைபயணமானது இதுவரை கேரளம், ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களை கடந்துள்ளது.
இதையும் படிக்க | பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
தற்போது பஞ்சாப்பிலிருந்து காஷ்மீருக்கு செல்லும் நடைப்பயணம் ஸ்ரீநகரில் ஜனவரி 30-ஆம் தேதி தேசிய கொடியேற்றத்துடன் நிறைவுபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

27 நட்சத்திரங்களே படிகளாக...

”தில்லி சென்றாலே முதல்வர் பயப்படுகிறார்!” டிடிவி தினகரன் பேட்டி
அமெரிக்க போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு!
வீடியோக்கள்

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

