தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

பூஜ்ய டிகிரி செல்சியஸ்: கடும் குளிரில் சிக்கித் தவிக்கும் வடமாநிலங்கள்!

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

News image
Updated On :18 ஜனவரி 2023, 7:14 am

பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் கடும் குளிர் நீடித்து வருவதால், அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

வடமாநிலங்களின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது.பஞ்சாபில் உள்ள பதிண்டா மற்றும் ஃபரித்கோட்டில் மைனஸ் 0.2 டிகிரி செல்சியஸ் மற்றும் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

அமிர்தசரஸில் 2.9 டிகிரியாகவும், லூதியானாவில் 2.8 டிகிரியாகவும், பாட்டியாலாவில் 2.6 டிகிரியாகவும், பதான்கோட்டில் 3.8 டிகிரியாகவும், குர்தாஸ்பூரில் 2 டிகிரியாகவும், மோகாவில் 0.5 டிகிரியாகவும் மொஹாலியில் 4.2 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரான சண்டிகரில் 3.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

ஹரியானாவில் நர்னால் 0.5 டிகிரியாகவும், சிர்சா 1 டிகிரியாகவும், ஹிசார் 2 டிகிரியாகவும், கர்னாலில் 2.4 டிகிரியாகவும், ரோஹ்தக்கில் 2.8 டிகிரியாகவும், அம்பாலாவில் 4.9 டிகிரியாகவும் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக கடும் குளிரின் பிடியில்  சிக்கித் தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.