ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.2 ஆகப் பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜம்மு - காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் இன்று (ஜனவரி 19) 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் உயிர் சேதமோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய நேரப்படி மதியம் 12:04 மணிக்கு 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என தேசிய நில அதிர்வு மையம் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஜனவரி 8ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாரில் 3.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் இரவு 11.15 மணியளவில் ஏற்பட்டதாகவும், மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...