வடக்கு தில்லியின் பவானா பகுதியில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திங்கள்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தானது இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தீ விபத்துக்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை. தீ விபத்தால் லட்சக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.