தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு வேலைக்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி

ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

News image

அரசு வேலைக்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி

Updated On :24 ஜனவரி 2023, 9:07 am


பிகானீர்: ராஜஸ்தான் மாநிலத்தில், அரசு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக, பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

கால்வாயில் வீசப்பட்ட ஐந்து மாதக் குழந்தை மரணமடைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அதன் பெற்றோரை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட குழந்தையின் தந்தை ஜான்வர்லால். அரசுப் பள்ளியில் உதவியாளராக ஒப்பந்த முறையில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்தப் பணிக்காக கடந்த டிசம்பர் மாதம் அளித்த பிரமாணப் பத்திரத்தில் அவர் தனக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மூன்றாவதாகப் பிறந்த குழந்தை பற்றி இவர்கள் அதில் தெரிவிக்கவில்லை. இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அரசு வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மூன்றாவதாகப் பிறந்த குழந்தையை அவர்கள் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில்தான், பிகானீர் மாவட்டம் சட்டர்கர் பகுதியில், ஒரு ஆணும், பெண்ணும், கால்வாயில் குழந்தையை வீசியதாக நேரில் பார்த்தவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றினர். பெற்றோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அரசுப் பணி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் பெற்ற குழந்தையை கால்வாயில் வீசியதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.