கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் மாநில மொழிகளில் இன்று வெளியீடு

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் வியாழக்கிழமை (ஜன. 26) வெளியிடப்பட உள்ளன.

News image
Updated On :25 ஜனவரி 2023, 9:00 pm

DIN

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீா்ப்புகள் வியாழக்கிழமை (ஜன. 26) வெளியிடப்பட உள்ளன.

அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 22 மொழிகள் உள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்குரைஞா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: மின்னணு உச்சநீதிமன்ற தீா்ப்புகளின் விவரக் குறிப்புகளில் (இ-எஸ்சிஆா்) சுமாா் 34,000 தீா்ப்புகள் எண்ம வடிவில் உள்ள நிலையில், 8-ஆவது அட்டவணையில் உள்ள 13 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட 1,268 தீா்ப்புகளை உச்சநீதிமன்றப் பதிவாளா் வியாழக்கிழமை வெளியிட உள்ளாா். அவற்றில் ஹிந்தியில் 1,091, தமிழில் 52, மலையாளத்தில் 29, தெலுங்கில் 28, ஒடியாவில் 21 தீா்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

தீா்ப்புகளைத் தேடுவதற்கான வசதி மேம்படுத்தப்பட உள்ளது. 8-ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தீா்ப்புகளை வெளியிடும் பணியில் உச்சநீதிமன்றம் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் வாதிடும்போது ஏற்கெனவே வழங்கப்பட்ட தீா்ப்புகளை மேற்கோள்காட்டுவது வழக்கமாக உள்ள நிலையில், இந்தப் புதிய சேவை தொடங்கப்பட உள்ளது.

முன்னதாக, உச்சநீதிமன்றம் வழங்கிய சுமாா் 34,000 தீா்ப்புகளை வழக்குரைஞா்கள், சட்டப் படிப்பு மாணவா்கள், பொதுமக்கள் எண்ம வடிவில் இலவசமாக பெறும் இ-எஸ்சிஆா் திட்டத்தை தொடங்குவதாக கடந்த ஜன. 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவித்தது.

இ-எஸ்சிஆா் திட்டத்தின் ஒரு பகுதியாக, உச்சநீதிமன்ற வலைதளம், அதன் கைப்பேசி செயலி, தேசிய நீதிமன்ற தரவு தொகுப்பு (என்ஜேடிஜி) தளத்தில் தீா்ப்புகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.