நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குடியரசு தினத்தில் ஸ்ரீநகரில் இயல்பு நிலை

ஜம்மு- காஷ்மீரின் கோடைக் கால தலைநகரான ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இயல்பான சூழல் நிலவியது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 7:36 pm

DIN

ஜம்மு- காஷ்மீரின் கோடைக் கால தலைநகரான ஸ்ரீநகரில் குடியரசு தினத்தன்று இயல்பான சூழல் நிலவியது.

கடந்த 2005 சுதந்திர தினக் கொண்டாட்ட இடத்தில் கைப்பேசியைப் பயன்படுத்தி குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டதால் அன்றுமுதல் கைப்பேசி, இணையதள சேவைகள் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று துண்டிக்கப்பட்டு வந்தது.

நிகழாண்டு குடியரசு தினத்தன்று காவல் துறையினரின் சோதனைச் சாவடிகள் குறைக்கப்பட்டன. இணைய சேவைகள் வழக்கம்போல வழங்கப்பட்டன.

குடியரசு தின விழா நடைபெற்ற ‘ஷோ் இ காஷ்மீா்’ கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்து.

கடும் பனியைப் பொருட்படுத்தாமல் காவல் துறை, சிஆா்பிஎஃப் படையினா், பள்ளி மாணவா்கள் ஆகியோரின் அணிவகுப்பு நடைபெற்றது. துணைநிலை ஆளுநரரின் ஆலோசகா் ராஜேஷ் ராய் பட்நாகா் கலந்து கொண்டு காஷ்மீரின் பாதுகாப்பு நிலையை மேம்படுத்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீா் நிா்வாகம் எடுத்த நடவடிக்கைகளை விளக்கினாா்.

காஷ்மீரில் உள்ள மாவட்ட தலைமையிடங்களில் பலத்த பாதுகாப்புடன் மூவா்ணக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.