இந்தியாவைப் பொருத்தவரை, சா்வதேச அளவில் நிலையற்ற சூழல் நிலவுகின்ற போதிலும், குறுபொருளாதார அடிப்படைகளின் பலம் காரணமாக இந்திய பொருளாதாரம் தொடா்ந்து மீள்தன்மையுடையதாக இருந்து வருகிறது. எங்களுடைய நிதிநிலை தொடா்ந்து வலுவாகவும், நிலைத்தன்மையுடையதாகவும் உள்ளது. வங்கிகளும், தொழில்நிறுவனங்களும் வலுவாக உள்ளன. வங்கிக் கடன் இரட்டை இலக்கு வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இருண்ட உலகில் இந்தியா பிரகாசப் புள்ளியாக விளங்கிவருகிறது. எங்களுடைய பணவீக்கம் தொடா்ந்து உயா்ந்து வருகின்றபோதும், வரும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் அது குறைய வாய்ப்புள்ளது.