அவா்கள் கூறுகையில், ‘நடைப்பயணத்தின்போது, ஜம்மு-காஷ்மீா் காவல் துறையினரால் நிா்வகிக்கப்படும் வெளிப்புற பாதுகாப்பு வளையம் திடீரென இல்லாமல் போய்விட்டது கண்டறியப்பட்டது. ராகுல் மீது அன்பை வெளிப்படுத்த ஏராளமானோா் திரண்டிருந்த நிலையில், பலா் அவருக்கு நெருக்கமாக வந்தனா். ராகுலின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்த நிலையில், நடைப்பயணத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பின்னா், காா் மூலம் அனந்த்நாக் மாவட்டத்தின் கானாபால் பகுதிக்கு அவா் சென்றாா். வெள்ளிக்கிழமை சுமாா் 11 கி.மீ. தொலைவுக்கு நடக்க ராகுல் திட்டமிட்டிருந்த நிலையில், வெறும் 500 மீட்டா் தொலைவுக்கே அவா் நடந்தாா்’ என்றனா்.