ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் புத்துணர்ச்சி காற்றாக வந்துள்ளது: மெகபூபா முப்தி

பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்பது போன்றதாக உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம் புத்துணர்ச்சி காற்றாக வந்துள்ளது: மெகபூபா முப்தி

பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்பது போன்றதாக உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு இன்று (ஜனவரி 28)  தான் முதல் முறையாக மக்கள் அதிக அளவில் வீட்டைவிட்டு வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராகுலுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அரசியலமைப்பின் 370-ஆவது விதியின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் காற்றாக வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதல் முறையாக தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். ராகுல் காந்தியுடன் ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டு நடந்தது சிறந்த அனுபவமாக இருந்தது எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com