47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராஜஸ்தான் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

ராஜஸ்தான் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  குற்றஞ்சாட்டியுள்ளார்.  

News image
Updated On :1 ஜூலை 2023, 2:10 pm

DIN

ராஜஸ்தான் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல்  குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறியதாவது, ராஜஸ்தான் நான்கரை ஆண்டுகளில் வளர்ச்சியடையவில்லை. ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் மோசடி செய்திகள் வருகின்றன. கெலாட் அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வியடைந்துவிட்டது. மாநிலத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை. 

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அரசு, ராஜஸ்தான் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. காங்கிரஸின் வாக்குறுதிகளை நம்பி ராஜஸ்தான் மக்கள், 2018ல் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்தனர். ஆனால், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. மத்திய அரசு இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்தது. 

இன்று, ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக உள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா ஐந்து பலவீனமான பொருளாதாரங்களில் ஒன்றாக கருதப்பட்டது. இன்று, இது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.