பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சின்னத்தில் போட்டியிடுவோம்: அஜீத் பவாா்

வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐந்தாவது முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜீத் பவாா் தெரிவித்தார்.

News image
Updated On :2 ஜூலை 2023, 5:21 pm

DIN

மும்பை: வரும் தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று ஐந்தாவது முறையாக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள அஜீத் பவாா் தெரிவித்தார்.

மகாராஷ்டிரம் மாநில அரசியலில் திடீா் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்த அஜீத் பவாா், மாநிலத்தின் துணை முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருடன் சோ்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களும் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். அக்கட்சியைச் சோ்ந்த 8 எம்எல்ஏ-க்கள் மாநில அமைச்சா்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இதுகுறித்து அஜீத் பவாா் கூறுகையில், நாட்டின் வளா்ச்சியைக் கருத்தில்கொண்டே இந்த முடிவை தேசியவாத காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. கட்சியின் அனைத்து எம்எல்ஏ-க்களும் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். 

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் எந்தப் பிளவும் காணப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு எனக்கு உள்ளது. நாங்களே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி. இனி வரும் தோ்தல்களில் நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்று அஜீத் பவாா் தெரிவித்தாா்.

மேலும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 53 எம்எல்ஏ-க்களில் 40 பேரும், 13 சட்ட மேலவை உறுப்பினர்களில் 6 பேர் பாஜக-சிவசேனை தலைமையிலான கூட்டணி அரசுக்கு ஆதரவு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்தாவது முறையாக துணை முதல்வரானார் அஜித் பவார்.

2011-2014 இல் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2 முறை துணை முதல்வராக இருந்துள்ளார். 

2019 இல் திடீரென பாஜகவுடன் கூட்டணி அமைத்து துணை முதல்வரானார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் 3 நாள்கள் மட்டுமே பதவி இருந்தது. 

2019 - 2022 வரை சிவசேனா, காங்கிரஸ் தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே அரசில் துணை முதல்வராக இருந்தார். 

தற்போது மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.